தமிழ்நாட்டில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2021-06-28 10:42 GMT

தலைமை செயலகம் (பைல் படம்)

சென்னை : தமிழ்நாட்டில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

* சென்னை ஆயுதப்படை போலீஸ் ஐஜிபியாக இருந்த ஜெ.லோகநாதன், சென்னை பெருநகர காவல்துறை தலைமையிடக் கூடுதல் காவல் ஆணையராகவும்,

* சென்னை பெருநகர காவல்துறை தலைமையிடக் கூடுதல் காவல் ஆணையராக இருந்த எம்.டி.கணேஷ்மூர்த்தி, சென்னை காவல்துறை தலைமையிட ஐஜிபியாகவும்

* நெல்லை நகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக இருந்த எம்.ராஜராஜன், தூத்துக்குடி பேரூரணி - காவலர் தேர்வு பள்ளியின் எஸ்.பியாகவும்

* சென்னை பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் கமாண்டண்டாக இருந்த டி.பி.சுரேஷ் குமார், நெல்லை நகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராகவும்

* தூத்துக்குடி பேரூரணி - காவலர் தேர்வு பள்ளியின் எஸ்.பியாக இருந்த எஸ்.செந்தில் சென்னை பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் கமாண்டண்டாகவும் நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News