பேருந்துகளில் 50% இருக்கைகளில் மட்டுமே அனுமதி .நாளை முதல் அமலுக்கு வருகிறது

நாளை முதல் பேருந்துகளில் 50% இருக்கைகளில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்

Update: 2021-05-05 06:45 GMT

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திட,நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன்படி அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50% இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணித்திட அனுமதிக்கப்படும் என தெரிவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் மாநகர போக்குவரத்துக்கு கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்திட அனுபாதிக்கப்படுவார்கள் என மாநகர போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது.

மேலும், பயணிகள் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும் எனவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் மாநகர போக்குவரத்துக்கு கழகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News