வங்கக்கடலில் உருவான 'குலாப்' புயல்: தமிழகத்திற்கு பாதிப்பா?

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-25 09:45 GMT

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் 'குலாப்' என்ற புயலாக  வலுப்பெறும். இது, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, ஒடிசா – ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது, நாளை மாலை கரையைக் கடக்கிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுவடைந்து கலிங்கப்பட்டினத்திற்கு சுமார் 740கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது வலுவடைந்து, வடக்கு ஆந்திரா, ஒடிசா மாநிலம் இடையே 26ம் தேதி காலை,  கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடலூர், காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Tags:    

Similar News