ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனையில் திருநங்கைகளுக்கு தனிப்பிரிவு துவக்கம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் திருநங்கைகளுக்கான தனிப்பிரிவு நாளை முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-08-05 03:11 GMT

பைல் படம்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் திருநங்கைகளுக்கான தனிப்பிரிவு நாளை முதல் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது.

வாரம் தோறும் ஒவ்வொரு வெள்ளிகிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை புறநோயாளிகள் பிரிவு இயங்கும்.

அங்கு மனநலம், பால்வினை நோய்கள், நாளமில்லாசுரப்பிகள்,ஒட்டுறுப்பு அறுவையியல் பிரிவு இயங்கும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

Tags:    

Similar News