தேனாம்பேட்டை தனியார் பள்ளி விடுதியில் கன்னியாஸ்திரி தூக்கிட்டு தற்கொலை

தேனாம்பேட்டையில் தனியார் பள்ளி விடுதியில் கன்னியாஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-06-27 17:11 GMT

தற்கொலை பைல் படம்

சென்னை : தேனாம்பேட்டையில் தனியார் பள்ளி விடுதியில் கன்னியாஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாஸ்திரி அருள் பெமினா என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக பள்ளி விடுதியில் தங்கி வகுப்புகள் நடத்தி வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக மனஅழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பிற்கு முன் தான் எழுதிய கடிதத்தில் தனக்கு மனஅழுத்தம் அதிகம் இருப்பதால் தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

Similar News