மெட்ரோ ரயில் பயண அட்டையின் செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு

கொரோனா காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமுடக்க காலத்தில் கியூஆர் குறியீடு பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யும் பயணிகளின் பயண எண்ணிக்கை செல்லுபடியாகும் கால அளவு, நாளை முதல் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Update: 2021-06-28 17:14 GMT
சென்னை மெட்ரோ ரயில் (பைல் படம்) 

சென்னை : கொரோனா காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமுடக்க காலத்தில் கியூஆர் குறியீடு பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யும் பயணிகளின் பயண எண்ணிக்கை செல்லுபடியாகும் கால அளவு, நாளை முதல் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி,  10 முதல் ஜூன் 20 வரை பயணிக்காத நாட்களுக்கான மெட்ரோ ரயில் பயண அட்டையின் அதற்கு சமமாக செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்துள்ளது.

எனவே பயணிகள் தங்கள் பயண அட்டையில் உள்ள பயண எண்ணிக்கையின் அளவை நீட்டித்துக் கொள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாடிக்கையாளர் சேவையை அணுகுமாறு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News