நாளை முதல் அனைவரும் பயணிக்கலாம் தென்னக இரயில்வே அறிவிப்பு

நாளை முதல் அனைவரும் பயணிக்கலாம் என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2021-06-24 09:30 GMT

பைல் படம்

சென்னையில் புறநகர் இரயில் சேவையை நாளை முதல் அனைவரும் பயன்படுத்தலாம் என தென்னக இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த இரயில் பயணம், தற்போது அனைத்து பயணிகளுக்கும் அனுமதிக்கப் படுகிறது.

மேலும் பயணிகள் விரைவு இரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு டிக்கெட் வைத்திருந்தால், அவர்கள் மின்சார இரயில்களில் பயணம் செய்து கொள்ளலாம். பெண்கள் 24 மணிநேரமும் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

12 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைத்து நேரத்திலும் பயணம் செய்யலாம். ஆண் பயணிகளுக்கு கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டுமே புறநகர் இரயில்களில் அனுமதி வழங்கப்படும்.

இரயில் நிலைய வளாகத்திற்குள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு ரூபாய் 500 அபராதம் வசூல் செய்யப்படும் " இவ்வாறு தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News