மே 3 முதல் பிளஸ் 2 தேர்வு: பள்ளிக் கல்வித்துறை முடிவு

Update: 2021-04-11 01:52 GMT

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளி வந்துள்ளது.

கொரோனா காலக்கட்டம் என்பதால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பள்ளி ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். எனவே வரும் மே 3 ஆம் தேதி முதல் பிளஸ் 2மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. அதேபோல் 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளி வந்துள்ளது.

Tags:    

Similar News