நடமாடும் வாகனத்தில் 3,087 பேருக்கு கோவிட் தடுப்பூசி
சென்னையில் நடமாடும் வாகனத்தில் 3,087 பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.;
நடமாடும் வாகனம்.
சென்னையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 29ம் தேதி முதல் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம் மூலம் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 6 நாட்களில் மட்டும் சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 2 ஆயிரத்து 477 பேருக்கும்,கோவேக்சின் 610 என இதுவரையில் 3 ஆயிரத்து 87 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.