ரேசன் கடைகளில் காலாவதியான பொருட்கள் இருந்தால் ஆய்வு அலுவலரே பொறுப்பு, கூட்டுறவு சங்கம் சுற்றறிக்கை

தமிழக ரேசன் கடைகளில் காலாவதியான பொருட்கள் வைத்திருந்தால் ஆய்வு அலுவலரே பொறுப்பு ஏற்க வேண்டும் என கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2021-07-06 08:32 GMT

இனி ரேசன் கடைகளில் காலாவதியான பொருட்கள் இருந்தால் ஆய்வு அலுவலரே பொறுப்பு. (பைல் படம்)

இதுகுறித்து, கூட்டுறவு சங்க பதிவாளர் மண்டல ஆய்வு அலுவலர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடையில் உணவு பொருட்களின் இருப்பு, வரவு மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தேங்கி காலாவதியானால் அதற்கு ஆய்வு அலுவலர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News