உணவு டெலிவரி ஊழியர் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

திருவிக நகரில் நடந்த உணவு டெலிவரி ஊழியர் கொலை வழக்கில் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த 2 பேர் கைது;

Update: 2021-12-02 08:01 GMT

கைது செய்யப்பட்ட நபர்.



சென்னை திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது 35 இவர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இவர் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே கார்த்திக்,  தீபக் என்கின்ற ரஞ்சித் குமார், அய்யனார், சின்னசாமி மற்றும் 17 வயது சிறுவன் என 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில்  அடைக்கப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பெரம்பூர் கென்னடி சதுக்கம் பகுதியை சேர்ந்த இலா என்கின்ற லிங்கராஜ் 20 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்கின்ற ஜெமினியாஸ் 22 என்ற நபரையும் திருவிக நகர் போலீசார் தேடிவந்தனர். கொலை நடந்து ஒரு மாதம் ஆன நிலையில் தொடர்ந்து இவர்கள் தலைமறைவாக இருந்தனர்.

இந்நிலையில் இவர்களை பிடிக்க செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.  நேற்று திருவிக நகர் இன்ஸ்பெக்டர் அன்பரசன் சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையிலான போலீசார் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே தங்கியிருந்த இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து மணிகண்டனை கொலை செய்ய உடந்தையாக இருந்ததற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News