வணிகர்கள் கோரிக்கை ஏற்று 27 மாவட்டங்களில் துணி, நகைக்கடைகள் திறக்க அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

வணிகர்கள், பொதுமக்கள் கோரிக்கை ஏற்று 27 மாவட்டங்களில் துணி, நகைக்கடைகள் திறக்க முதல்வர் மு.க ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார்.

Update: 2021-06-27 18:28 GMT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பைல் படம்)

சென்னை: வணிகர்கள் மற்றும் பொதுமக்களி்ன் கோரிக்கையை ஏற்று பிற 23 மாவட்டங்களுக்கும் துணி மற்றும் நகைகடைகளை திறக்க அனுமதிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு (28/06/2021) இன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை வருகிற ஜுலை 5ம் தேதி காலை 6 மணி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பின் படி, கொரோனா பாதிப்புக்கு ஏற்ப மாவட்டங்கள் மூன்று முறையில் வகைப்படுத்துள்ளது. அதன்படி வகை ஒன்றில் கோயம்புத்துார், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களும், வகை 2 ல் அரியலுார், கடலுார், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலுார், புதுக்கோட்டை, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்துார், திருவண்ணாமலை, துாத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலுார் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களும்,

வகை 3 ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளது. வகை 3 ல் அனைத்துக் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 7மணி வரை இயக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் வணிகர்கள் மற்றும் பொதுமக்களி்ன் கோரிக்கையை ஏற்று வகை 2ல் இடம் பெற்ற 23 மாவட்டங்களும் திறக்க மாவட்டங்களுக்கு அனுமதிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News