மதுபோதையில் ரயில்வே ஊழியரை வெட்டி பணம் பறித்த வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது
சம்பவம் தொடர்பாக ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்;
ஓட்டேரியில் மதுபோதையில் ரயில்வே ஊழியரை வெட்டிய வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காலனி 5வது தெருவைச் சேர்ந்தவர் சங்கர்( 46 ). ரயில்வே ஊழியரான இவர் பெரம்பூர் கேரேஜில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து 10 மணி அளவில் அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காலனி 7 வது தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஐந்து இளைஞர்கள் சங்கரை வழிமறித்து அவரிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் இல்லை என்று கூறவே, அவரது மேல் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்தனர். அப்போது அவர் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.
அப்போது அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சங்கரின் தலையில் தாக்கியதுடன் இடுப்பிலும் குத்தினார். இதில் சங்கர் . சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உள்நோயாளியாக சங்கர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஓட்டேரி ஏகாந்திபுரம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார்(19.) அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்( 21.) விஜய்( 19 ) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேரையும் கைது செய்தனர். ஏற்கனவே மது போதையில் இருந்த இவர்கள், மது குடிக்க பணம் இல்லாததால் ரயில்வே ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது இதனையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒருவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்..