சென்னையில் போலீஸார் வாகன சோதனை: 1.54 கோடி பணம் பறிமுதல்

கொடுங்கையூர் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கணக்கில் வராத 1.54 கோடி பணம் சிக்கியது

Update: 2021-10-13 23:40 GMT

சென்னையில்  நடந்த வாகனசோதனையில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பபட்ட கணக்கில் வராத பணம்

வட சென்னை புளியந்தோப்பு மாவட்டம் பி6 கொடுங்கையூர் பகுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெற்றிவேந்தன் மற்றும் தலைமை காவலர் கணபதி ஜி என் டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது TN 66 D 4981 சென்ற வாகனத்தை தணிக்கை செய்யும் பொழுது பின்னால் இருந்த நபர் சந்தேகப்படும்படியாக இருந்ததால்  போலீஸார் அவரை விசாரித்தனர்.  அவரிடம் பணப்பைகள் இருந்ததால் உடனடியாக கொடுங்கையூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வாகனத்தை கொடுங்கையூர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில், அந்த பணப்பையில் ஒரு கோடியே ஐம்பத்தி நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ( 1,54,50,000 ) இருந்துள்ளது இது தொடர் காவல் துணை ஆணையாளர்,  பறிமுதல் செய்த  ரொக்கம் குறித்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News