இலவச உணவு வழங்கும் திட்டம் அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்

சென்னையில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

Update: 2021-05-11 08:15 GMT

தமிழகத்தில் மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகளுக்கு தரமான உணவு 24 மணி நேரமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி,சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் உள்நோயாளிகளுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி,ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கும் சேவையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து,அமைச்சர் சேகர் பாபு,செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையைப் போன்று,தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் மிக விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News