கிரானைட் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக கொரோனா நிவாரண நிதியுதவி

தமிழ்நாடு குவாரி கிரானைட் உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பாக 1 கோடியே 25 லட்சத்து 1 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையைை தமிழக முதல்வரிடம் வழங்கினர்.

Update: 2021-06-26 06:01 GMT

சென்னை: தமிழ்நாடு குவாரி கிரானைட் உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பாக கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடியே 25 லட்சத்து 1 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையைை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினர். 

இந்நிகழ்வின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News