காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் மு.க ஸ்டாலின்

காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும்.. மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்

Update: 2021-06-12 05:24 GMT

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்க ஷெகாவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரை சார்ந்தே காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. காவிரியில் நீர் திறக்கப்படாவிடில் குறுவைப் பயிரும், சம்பா சாகுபடியும் பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் உரிய அளவில் காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News