அகில இந்திய கட்டுநர் நலச் சங்கம் சார்பில் ரூ.77 லட்சம் கொரோனா நிவாரண நிதியுதவி..!

Update: 2021-06-20 16:17 GMT

சென்னை : அகில இந்திய கட்டுநர் சங்கம் தமிழ்நாடு சார்பில் அதன் மாநிலத் தலைவர் சிவக்குமார், அகில இந்திய துணைத் தலைவர் அய்யநாதன், தென்னக மய்ய தலைவர் சாந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் ராதா கிருட்டிணன் ஆகியோர் சந்தித்து,கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.77 லட்சத்து 77 ஆயிரத்து 777 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு உடனிருந்தார்.

Tags:    

Similar News