சென்னை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆய்வு கூட்டம்!

சென்னையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-14 09:36 GMT

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் பேரரிடர் மேலாண்மை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்  தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலர் குமார்ஜெயந்த், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திர ரெட்டி மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News