ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா திட்டம்: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

ஏழை பயனாளிகளுக்கு இலவச வீட்டு பட்டா வழங்கும் திட்டத்தை, ஒரு வருடத்திற்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-09-28 05:00 GMT

இது தொடர்பாக, தமிழக அரசின் முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: நில நிர்வாக ஆணையர், தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'ஆன்லைன் தமிழ் நிலம் போர்டல்' மூலம் ஆட்சேபிக்க முடியாத புறம்போக்கு நிலங்களில் 1,36,572 குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, ஜிஎல்ஆரில் ஏற்றப்பட்டு ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்தவும், வீட்டுப் பட்டாக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலத்தில் 1,77,923 குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, மாற்று புறம்போக்கு நிலத்தை அடையாளம் காண, அல்லது ஆக்கிரமிப்பாளர்களை மீள்குடியேற்றம் செய்யும் வகையில்,  தனியார் பட்டா நிலத்தை வாங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

முன்னதாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், இந்த சிறப்பு திட்டம் 30.8.2021 அன்று முடிவடைகிறது. தற்போது, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு, மேலும் ஒரு வருட கால நீட்டிப்பு செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதனை கவனமாக ஆராய்ந்த பிறகு, நில நிர்வாக ஆணையரின் முன்மொழிவை ஏற்று, இச்சிறப்புத் திட்டத்தை 31.8.2021 முதல்,  மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News