இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

மற்ற கடைகள் மட்டுமே திறந்திருக்கும். இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2021-05-23 01:21 GMT

டாஸ்மாக் கடை கோப்பு படம்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தாக்கம் காரணமாக தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் பால், மருந்து பொருட்கள், குடிநீர், பத்திரிக்கை உள்ளிட்டவற்றின் விநியோகத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நலன் கருதி நேற்று இரவு 9 மணி வரை மற்றும் இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதிக்கவில்லை. அதேபோல் இன்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News