முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ 5 லட்சம் கொரோனா நிதி வழங்கினார் நடிகர் வடிவேல்

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ 5 லட்சத்தை நடிகர் வடிவேலு வழங்கினார்.

Update: 2021-07-14 16:24 GMT

சென்னை தலைமை செயலகத்தில் நடிகர் வடிவேலு பேட்டி அளித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து நடிகர் வடிவேலு கொரோனா முதல்வர் பொது நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்

மிக மகிழ்ச்சியாக இருக்கிறது முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது.. மிக எளிமையாக இருக்கிறார் குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து என்னிடம் பேசினார், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்து அவரை சந்தித்தேன்.

ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் அளவில்கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளார். தமிழக முதல்வரே தெருத்தெருவாக சென்று மக்கள் தடுப்பூசி போட முகாம் அமைத்து வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்திய முதல்வர் இவர்..

யார் மனதும் புண்படுத்தாமல் ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தி வருகிறார்.. தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியை அமைத்துக் கொடுத்துள்ளார்.. கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். நான் அரசியல் பேசவில்லை தமிழ்நாடு நன்றாக இருக்கிறது அதை ஏன் பிரிக்கவேண்டும்.

Tags:    

Similar News