ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதிமாறன் எம்பி ஆய்வு

சென்னை

Update: 2021-05-13 12:18 GMT

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை வசதிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்பி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

முன்பாக மருத்துவமனை முதல்வர் மற்றும் மூத்த மருத்துவர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கலந்து ஆலோசித்தனர். அதன் பின்னர்  மருத்துவனையில் கொரோனா தொற்று பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், பிற பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் சுமார் 3385 உணவுப் பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களையும் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்பி ஆகியோர் வழங்கினர்.

Tags:    

Similar News