அரசு காப்பகத்தில் 6 சிறுவர்கள் தப்பியாேட்டம்: போலீசார் விசாரணை

அரசு காப்பகத்தில் 6 சிறுவர்கள் எஸ்கேப் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-16 08:24 GMT

ராயபுரம் சூரிய நாராயண சாலையில் சமூகநல பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் அரசினர் குழந்தைகள் காப்பகம்.

அரசு காப்பகத்தில் 6 சிறுவர்கள் எஸ்கேப் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

ராயபுரம் சூரிய நாராயண சாலையில் சமூகநல பாதுகாப்பு துறையின் கீழ் அரசினர் குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. சுமார் 40க்கும் அதிகமான சிறார்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த இல்லத்தின் பாதுகாவலர் காசிமேடு காவல்நிலையத்தில் நேற்று அளித்த புகாரில், அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 40 சிறார்களில் 14 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்களை கடந்த இரண்டு தினங்களாக காணவில்லை.

இதில், அசாம், உ.பி, மேற்குவங்கம், அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள், ஒருவர் தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவர்களை தேடி  வருகிறார்கள்.

Tags:    

Similar News