ஏப். 30 க்குள் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள பள்ளி கல்வித்துறை அட்வைஸ்

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஏப்ரல் 30ம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-04-28 14:04 GMT

இது தொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முன்களப்பணியாளர்கள் ஆகியோர் துரிதமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களில்,  45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

மேலும், அதுகுறித்த விவர அறிக்கையை பள்ளிக்கல்வி  இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். கொரோனா தடுப்பு தொடர்பான பணிகளில் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து கல்வி அதிகாரிகள் பணிபுரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News