முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ மனையில் அனுமதி

குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-04-19 06:30 GMT

தமிழகத்திற்குக் கூடுதல் கட்டுப்பாடு விதிப்பது குறித்தும் நேற்றைய தினத்தில் முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்நிலையில் இன்று சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காகத் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அறுவை சிகிச்சைக்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்குத் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

Tags:    

Similar News