துளசி ஐயா வாண்டையார் மறைவு: வைகோ இரங்கல்

துளசி வாண்டையார் மறைவுக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-17 05:01 GMT

துளசி ஐயா வாண்டையார்

துளசி ஐயா வாண்டையார் மறைவுக்கு வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், துளசி ஐயா வாண்டையார்  இயற்கை எய்திய செய்தி அறிந்து, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.தஞ்சைத் தரணியில், காங்கிரஸ் பேரியக்கத்தைத் தொடங்கித் தோள்கொடுத்து வளர்த்த முன்னோடிகளுள் ஒருவரானவர்.  பெருந்தலைவர் காமராசருக்கு நெருக்கமானவர். காந்தியின் தொண்டர்.

நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்தபோது, ஒருநாள் கூடத் தவறாமல், நாடாளுமன்றம் சென்று, நூற்றுக்கு நூறு வருகையைப் பதிவு செய்தவர்.

பூண்டி புஷ்பம் கல்லூரி மாணவர் சேர்க்கையில், நன்கொடை எதுவும் வாங்கக்கூடாது என விதி வகுத்தார். தமது வருவாயின் பெரும்பகுதியை, அக்கல்லூரியின் வளர்ச்சிக்காகச் செலவிட்டார். பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றினார்.

என் மீது பற்றும் பாசமும் கொண்டு இருந்தார். 94 வயதான அவர், நூறாண்டு கடந்து வாழ்வார் என்று கருதி இருந்தேன். அவரது மறைவு, ஆற்ற இயலாதது. அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரால் பயன் பெற்றவர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News