தமிழகத்தில் ஒரேநாளில் 35,579 பேருக்குக்கு கொரோனா தொற்று; சுகாதாரத்துறை

தமிழகத்தில் ஒரே நாளில் 35,579 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-05-21 01:01 GMT

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 17,34,804. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 4,62,448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,52,283. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 9 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இதுவரை மொத்த எண்ணிக்கை 42,01,378.

சென்னையில் 6073 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 29,506 பேருக்குத் தொற்று உள்ளது.தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 198 தனியார் ஆய்வகங்கள் என 267 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து  பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில்,  தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,63,390. மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,52,53,645.

 ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,62,638. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 17,34,804. தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 35,579.

சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6073.  சென்னையில்  சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 47,667.மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 10,33,741 பேர். பெண்கள் 7,01,025 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.

தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 19,919 பேர். பெண்கள் 15,660 பேர். டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 25,368 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 14,52,283 பேர்.

கொரோனா ரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 397 பேர் உயிரிழந்தனர். 185 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவார், 212 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 19,131 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 6105 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 300 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 97 பேர்.

 மாநிலம் முழுவதும் 2167 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 9181 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 440 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன என்று .குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News