விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா மூன்று இலட்சமும் காயமுற்றவர்களுக்கு தலா இலட்சமும் உடனடியாக வழங்கப்படும்;

Update: 2022-01-02 15:15 GMT

பைல் படம்

விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் களத்தூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் ஐந்து பேர் இறந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன் , இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் . இந்த வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா மூன்று இலட்சமும் காயமுற்றவர்களுக்கு தலா இலட்சமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்..

Tags:    

Similar News