எரிசக்தி துறையின் செயல்பாடு குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் எரிசக்தித் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-07-22 14:17 GMT

எரிசக்தித் துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அருகில் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள்.

இந்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில்  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை செயலாளர், நீதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர்,

தமிழக மின்விசை நிதி, அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் தலைமை செயலாளர், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகி்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், தமிழக எரி சக்தி மேம்பாட்டு முகமையின் மேலாண்மை இயக்குனர், மின் உற்பத்தி மற்றும் பகி்மானக் கழகத்தின் காவல்துறை இயக்குனர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News