சென்னை மக்களே உசார்... ஒரே நாளில் 4985 பேர் பாதிப்பு

சென்னையில் இன்று புதிதாக 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

Update: 2021-05-24 16:46 GMT

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாயின. அதில், தமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 18,77,211 ஆக உள்ளது. அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 4,985 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 4,83,757 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 27,026 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 15,54,759 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 3,01,580 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மேலும் 404 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு 20,872 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News