வாக்கு எண்ணிக்கை நேரம் மாற்றம்: சத்யபிரதா சாஹு

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்

Update: 2021-04-23 09:00 GMT

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதையடுத்து வருகிற மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மே 2ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று கூறி வந்த நிலையில் தற்போது 8 மணிக்கே தொடங்கிவிடும் என்று சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News