பாலியல் புகார்... அண்ணாநகர் பத்ம சேஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் கைது!

பாலியல் தொல்லை புகாரின் பேரில் சென்னை அண்ணாநகர் பத்ம சேஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-30 11:58 GMT

சென்னையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அண்ணாநகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெவின் ராஜ் கைது செய்யப்பட்டு உள்ளார்.

முன்னதாக அப்பள்ளியின் மாணவி ஒருவரை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கராத்தே மாஸ்டர் கெவின் ராஜை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News