ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் கருவியினை அமைச்சர்கள் ஆய்வு

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் ( ஈ.எஸ்.ஐ) சி.டி ஸ்கேன் கருவியினை அமைச்சர்கள் ஆய்வு

Update: 2021-06-19 16:25 GMT

சென்னை அயனாவரம் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் ( ஈ.எஸ்.ஐ) சி.டி ஸ்கேன் கருவி மற்றும் 6000 லிட்டர் ஆக்சிசன் டேங்கினை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.சேகர்பாபு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வில், வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலர் ஜெ. இராதாகிருஷ்ணன் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர்கள் குருநாதன், அசோக் குமார் (ஈ.எஸ்.ஐ) மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News