சென்னை மாநகராட்சி சார்பில் ட்ரோன் மூலம், கொசு மருந்து தெளிக்கும் பணி

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர் வழித்தடங்களில், கொசு புழுக்களை கட்டுப்படுத்த, ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது.

Update: 2021-07-01 10:49 GMT

சென்னை மாநகராட்சி (பைல் படம்)

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர் வழித்தடங்களில் கொசு புழுக்களை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது 3 ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு நாள் ஒன்றிற்கு மூன்று மண்டலங்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.

நாள்தோறும் எந்தெந்த மண்டலங்களில் ட்ரோன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள கீழ்கண்ட இணையதள இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். https://www.gccdrones.in/. இவ்வாறு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News