கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்காதீர்கள், நடிகர் கார்த்தி ஆவேசம்

ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவுக்கு நடிகர் கார்த்தி தனது கடும் கண்டனத்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Update: 2021-07-06 08:01 GMT

நடிகர் கார்த்திக் ( பைல் படம்)

நடிகர் கார்த்திக் இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா 2021, ஒரு படத்தின் தணிக்கைச் சான்றிதழை எந்த நேரத்திலும் நிராகரிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது. இது அனைத்துப் படங்களின் வியாபாரத்தை பாதிப்பதோடு பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்துகிறது. அத்துடன் திரைத் துறையையும் பாதிக்கிறது.

இதுபோன்ற முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும். பைரசியைத் தடுப்பதற்கான சட்ட வரைவுகள் தேவைப்படும் போது நம்மைப் போன்ற நாகரிகமான சமூகத்தில் கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை நெரிப்பது தேவையற்றது. நமது வேண்டுகோளை ஏற்க அரசை வலியுறுத்துவோம்". இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News