தமிழகத்தில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-07-06 13:31 GMT

சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த காரணத்தால் தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே மூன்றாம் அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும், மக்களையும் நாட்டையும் பாதுகாக்க தமிழக அரசு தளர்வுகளை கடுமையாக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News