சென்னை மேற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நேர்காணல் நிகழ்ச்சி

சென்னை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-08-08 18:15 GMT

காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ரஞ்சன் பேட்டி அளித்தார்.

தமிழக காங்கிரஸின் மத்திய சென்னை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட வில்லிவாக்கம் அண்ணாநகர் எழும்பூர் மூன்று தொகுதிகளில் நிர்வாகிகளுக்கான நேர்காணல் சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ரஞ்சன் கூறியதாவது.:

காங்கிரஸ் கட்சியில் ரஜினி மக்கள் மன்றம்,தமிழ் மாநில காங்கிரஸ்,அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர் எனவும் அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற ஜனநாயக ரீதியில் தற்பொழுது இந்த நேர்காணல் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த நேர்காணல் மூலம் திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் ஆணைக்கிணங்க உரிய பொறுப்புகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News