சென்னை கராத்தே மாஸ்டர் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

சென்னை அண்ணாநகர் பத்ம சோஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Update: 2021-06-04 09:19 GMT

கராத்தே மாஸ்டர் கெவின் ராஜ்.

சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல் புகார் கொடுத்தனர். இது பெரும் பரபபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த விவகாரம் விஷ்வரூம் எடுத்து வந்த நிலையில் இதே பள்ளி நிர்வாகத்துக்கு உட்பட்ட சென்னை அண்ணாநகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் எழுந்தது.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது மாணவிகள் அடுக்கடுக்காக புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பரிந்துரையின் பேரில் இவ்வழக்கை  சிபிசிஐடிக்கு மாற்றுள்ளதாக டிஜிபி திரிபாதி தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News