சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்கள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்களை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2021-06-02 04:14 GMT

சென்னை மாநகராட்சிக்கு அண்ணாநகர் எம்எல்ஏ மோகன், கிருமி நாசினி வாகனங்களை வழங்கியபோது.

சென்னையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக பாதிக்கு கீழ் கொரோனாவின் தொற்று குறைந்துகொண்டே வருகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை அண்ணாநகர் எம்.எல்.ஏ.மோகன் ஏற்பாட்டில் பேட்டரியால் இயங்கும் கிருமி நாசினி தெளிக்கும் 24 வாகனங்களை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடியிடம் வழங்கப்பட்டது. 

இதனை இந்து சமய அறநிலையத்தறை அமைச்சர் சேகர்பாப, தயாநிதி மாறன் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர். உடன் சென்னை மேற்கு மாவட்ட திமுக பொருப்பாளர் சிற்றரசு மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

Tags:    

Similar News