சென்னை அண்ணாநகரில் கொரோனா சிகிச்சை மையம்: உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை அண்ணாநகரில் 100 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

Update: 2021-05-29 15:26 GMT

சென்னை அண்ணாநகரில் கொரோனா சிகிச்சை மையத்தை உதயநிதிஸ்டாலின் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

சென்னை அண்ணா நகர் எம்எல்ஏ மோகன் ஏற்பாட்டில் அண்ணாநகர் பெரிபரல் மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திறந்து  வைத்தார். 

பின்னர் சுகாதார பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்பி,  மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News