பெண் காவலர் வீட்டில் கைவரிசை: சைடு லாக்கை உடைத்து இருசக்கர வாகனம் திருட்டு

சென்னையில் லாவகமாக சைடு லாக்கை உடைத்து இருசக்கர வாகனம் திருட்டு. தலைமை பெண் காவலர் வீட்டிலே கை வரிசை காட்டிய பலே திருடன்.

Update: 2022-04-18 07:45 GMT

தலைமை பெண் காவலர் வீட்டிலே கை வரிசை காட்டிய பலே திருடன்.

சென்னை கள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மனைவி ஜெகதம்மாள், இவர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல அவரது கணவர் மணிகன்டன் இவரது வீட்டின் கீழே தனது உயர் ரக இருசக்கர வாகனமான பல்சர் வாகனத்தை நிறுத்தி விட்டு மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது வீட்டின் கீழே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் காணமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தான் பணியாற்றும் அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஜெகந்தம்மாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த பொழுது முககவசம் அணிந்து வந்த நபர் பல்சர் இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த சிசிடிவி காட்சிகளின் உதவியோடு போலீசா ர் இருசச்கர வாகன கொள்ளையனை தேடி வருகின்றனர்.

ஏற்கனவே இதே குடியிருப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக உயர் ரக இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற நிலையில் இது வரை கொள்ளையனை பிடிக்க வில்லை என்றும், தொடரும் இருசச்கர வாகன திருட்டை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியையும் அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர். பெண் தலைமை காவலர் வீட்டிலே கைவரிசை காட்டிய அந்த பலே கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News