ஆவினில் 47 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் வேலை -முதல்வர் வழங்கினார்

ஆவினில் பணியில் இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 47 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2021-08-22 01:25 GMT

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் (ஆவின்) பணிபுரிந்து பணிக்காலத்தில் இறந்த 47 ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று  வழங்கினார்.ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் விற்பனை செய்ய முதற்கட்டமாக 6 மொத்த விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வணிக ஒப்பந்த ஆணைகளும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News