அம்பத்தூர் : டாஸ்மாக் கடை மூடக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2021-06-17 17:22 GMT

சென்னை : கொரோனா காலத்தில் மதுபான கடைகளை திறந்த தமிழக அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.என்.சேகர் தலைமையில் அம்பத்தூர் கள்ளிக் குப்பத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு எதிர்ப்பு பாதாகைகள் உடன் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் சசிகலா ஜெயராமன், வழக்கறிஞர் ஆர்.கே.கோபி கோடீஸ்வரன், குரு ஏழுமலை பாண்டுரங்கன், சுப்புராஜ், கொரட்டூர், கோவிந்தராஜ், சண்முகம் ஆகிய பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News