அம்பத்தூர்: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்

அம்பத்தூரில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-05-19 15:12 GMT

அம்பத்தூரில் கொரோனா தடுப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று சென்னை அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

 இக்கூட்டம்  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமை தாங்கினார்.  ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  ஜோசப் சாமுவேல், ஒருங்கிணைப்பு அலுவலரும், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனருமான சுரேஷ்குமார்  மற்றும் மண்டல அலுவலர் விஜயகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

Tags:    

Similar News