சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-04-01 06:21 GMT

துபாயிலிருந்து வந்த சிறப்பு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.28.26 லட்சம் மதிப்புடைய 621 கிராம் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தி வந்த கேரளா பயணி கைது செய்யப்பட்டார்.

துபாயிலிருந்து எமிரேட்ஸ் சிறப்பு விமானம் நேற்று காலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது கேரள மாநிலம் திரிசூரை சோ்ந்த முகமது செகில்(28) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனா். அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.28.26 லட்சம் மதிப்புடைய 621 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா். அதோடு அந்த பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

Similar News