தமிழகத்தில் புதியதாக 54 ஆயிரம் பேருக்கு வேலை; முதல்வர் இன்று கையெழுத்து

தமிழகத்தில் 54,041 நபர்களுக்கு புதியதாக வேலைகிடைக்ககும் வகையில் 33 திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

Update: 2021-07-20 04:33 GMT

பைல் படம்

தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த 33 நிறுவனங்களுடன் தமிழக அரசு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது.

சுமார் ரூ.17,297 கோடி முதலீட்டில் 54,041 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைகிறது. சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

மேலும், ஒப்பந்தங்கள் மட்டுமின்றி 14 திட்டங்களுக்கும் முதல்வர் இன்று அடிக்கல் நாட்டுவார் என்றும் அரசு வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News