செங்கல்பட்டு கிரிக்கெட் அசோசியேஷனுக்கு விரைவில் தனி டிஎன்பிஎல் அணி

செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் தனி டி.என்.பி.எல். அணியை உருவாக்கபட இருப்பதாக, அதன் செயலாளர் பிரபு தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-13 06:30 GMT

தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட சிறந்த கிரிக்கெட் அணி, சிறந்த பேட்ஸ்பேன், பவுலர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அசோஷியனின் 2வது ஆண்டு விழா, தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் சிறந்த கிரிக்கெட் அணி, சிறந்த பேட்ஸ்பேன், பவுலர் ஆகியோர தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஐ.எப்.எஸ்.அதிகாரி கலாநிதி, வீரர்களுக்கு விருதுகள் வழஙகி பாராட்டி பேசினார். நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களிடம், செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அசோசியனின் தலைவர் செல்வகுமார் மற்றும் பிரபு ஆகியோர் பேசினர்.

அவர்கள் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அசோசியனில் புதியதாக ஆயிரம் வீரர்கள் இணைந்துள்ளனர். கிராமப்புறத்தில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களையும் தேடி கண்டுபிடிக்கும் பணியை செய்து வருகிறோம். தற்போது டி.என்.பி.எல்.அணியில் 4 பேர் வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து இடம் பெற்றுள்ளனர். விரைவில் செங்கல்பட்டுக்கான தனி டி.என்.பி.எல். அணி இடம் பெறும் என்றனர். செங்கல்பட்டு  கிரிக்கெட் அசோசியேசன் துணை செயலாளர் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News