பம்மல்: பிரபல பிரியாணிகடையில் வடமாநில வாலிபர் மின்சாரம் தாக்கி பலி!

பல்லாவரம் அருகே பம்மல் பகுதியில் பிரபல பிரியாணிகடையில் பணியாற்யி வடமாநில வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.

Update: 2021-05-21 10:46 GMT

பலியான வடநாட்டு வாலிபர்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை அடுத்த பம்மல் அண்ணா நகர், காந்தி சாலையில் இயங்கி வரும் ஆம்பூர் பிரியாணி கடையில் வடமாநிலத்தை சேர்ந்த ஆஷிக் (வயது 24) திருமணம் ஆகாதவர். கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

இவர் பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர், இன்று காலை பிரியான கடையில் வேலை பார்க்கும்போது கடையின் மேல்தளத்தில் எக்ஸாஸ்ட் மின்விசிறி பொருத்த சென்றபோது மின்விசிறியின் ஒருபகுதி அருகிலிருந்த உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது உரசியதால் மின்சாரம் தாக்கி ஆஷீக் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிவந்த பம்மல் சங்கர்நகர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆவிற்காக குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேலும் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News