வலிப்பு நோயால் கட்டிடத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

சென்னை விமானநிலைய வளாகத்திற்குள் வடமாநில கட்டிடத்தொழிலாளி ஒருவர் வலிப்பு நோயால் திடீா் உயிரிழந்தார்

Update: 2021-11-20 08:01 GMT

வலிப்பு நோயால் உயிரிழந்த தொழிலாளி 

அஸ்ஸாம் மாநிலத்தை சோ்ந்தவா் தீபக் (34). இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னை வந்துள்ளாா்.சென்னை பல்லாவரத்தில் உள்ள ரெடிமிக்ஸ் என்ற சிமெண்ட் காங்கீரிட் கலவை செய்யும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றியுள்ளாா்.

இந்நிலையில் நேற்று தீபக், சென்னை விமானநிலையத்தில் நடக்கும் கட்டுமான பணியில் வேலை செய்யும் தனது நண்பா்களை பாா்க்க நேற்று மாலை வந்தாா்.அப்போது அவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுந்தாா்.உடனடியாக விமானநிலைய கட்டுமான ஊழியா்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு அனுப்பி வைத்தனா்.

தீபக் உடல்நல் தேறியதும் இன்று காலை மீண்டும் சென்னை விமானநிலையத்தில் கட்டுமான பணிகள் நடக்கும் இடத்திற்கு வந்தாா்.அப்போது காலை 7.30 மணியளவில் மீண்டும் வலிப்பு ஏற்பட்டது.உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனா்.ஆம்புலன்ஸ் வந்து பாா்த்தபோது தீபக் உயிரிழந்து கிடந்தாா்.

இதையடுத்து சென்னை விமானநிலைய போலீசாா் தீபக் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.அதோடு சந்தேகத்திற்கிடமான மரணம் என்று 174 பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Tags:    

Similar News